Blog Widget by LinkWithin

தமிழர் திருமணமுறை -2

>> 04 March 2010

வாழ்வியல் வழிகாட்டி (அ) திருவள்ளுவர் வழிபாடு

மக்கள் அனைவரும் உலகில் தக்க வகையில் எவ்வாறு வாழவேண்டும் என்று வழிகாட்டியவர் திருவள்ளுவர்.
அறத்தால் பொறுள் தேடி, அப்பொருளால் இன்புற வேண்டும் என்பதற்காக முப்பால் அருளியவர் அப்பெருமகனார்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும்
அறத்தால் வருவதே இன்னபம்
என்றும் தெளிவு படுத்தியவர் அவர்.

இரு சிறகு வீசுப் பறக்கும் ஒரு பறவையைப் போல், மணமக்கள் இருவரும் ஒருமைத் தன்மையராய் இல்வாழ்க்கை நடத்தினால் அவர்கள் வாழ்வே வீடுபேறு இன்பம் என்றும், அமிழ்தம் அருந்தும் அமர வாழ்வு என்றும் கூறியவர் அவர்.

கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் துணையாக அமைந்து குடும்பக் கதமையை இருவரும் ஒப்பாகத் தாங்கி, வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவர்கள் வாழ்வு தெய்வ வாழ்வு என்று உறுதி மொழி தந்தவர் அவர். ஆதலால், நலவாழ்வு வேண்டு அவரைப் போற்றுவோம், எனக் கூறி, வள்ளுவர் சிலைக்கோ, படத்திற்கோ திருக்குறள் நூலுக்கோ மலர் தூவி மணமக்கள் வழிப்படச் செய்தல்.

வள்ளுவம் வாழ்க ! வாழ்வியல் வாழ்க !

என மும்முறை அவர்களைக் கூறச் செய்தல்.

சான்றோர் வழிபாடு

மணவிழாவுக்கு வந்துள்ள பெருமக்கள்,தாய்மார்கள், செல்வர்கள் அனைவரையும் போற்றும் வகையில மணமக்கள் எழுந்து நின்று, அவையோரை வணங்குமாறு செய்தல். சானாறக பெருமக்களே, நீங்கள் தனச்சான்றுடன் பேசி, அதன் படி செயலாற்றும் பெருமக்கள். நீங்கள் திருமணத்திற்கும் சான்றாக விளங்குகின்றீர்கள்.இம்மணமக்கள் இந்த நல்ல பொழுதில் , அவையோராகிய உங்கள் அனைவரின் வாழ்த்தையும் வேண்டு, வணங்குகின்றார்கள.தனித்தனியே வந்து வணங்குதல் போலாகா நேரங்கருதி உங்கள் அனைவர் முன்னும் நின்று வணங்குகின்றார்கள். நாங்கள் அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தஃதோ, புரியாமலோ ஏதாவது சொல்லியிருந்தாலும், செய்திருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு எங்களை வாழ்த்தியருளவேண்டுகின்றோம்.ஆயிரம் வாழ்த்துதல் ஒரு பூனையையும் யானையாக்கும்.உங்கள் வாழ்த்துதல் எங்களை என்றென்றும் ஓங்கி உயர்ந்து வாழச் செய்யும் என உங்களை வேண்டுகின்றார்கள் எனக் கூறி அவையினரை வணங்கச் செய்தல்.

சான்றோர் வாழ்க ! சால்புகள் வாழ்க !

என மணமக்களை மும்முறை கூறச்செய்தல்,சான்றோர் அனைவரையும்

மணமக்கள் வாழ்க ! வாழக!

என மும்முறை வாழ்த்தச் செய்வித்தல்.

பெற்றோர் வழிபாடு

மணமக்களைப் பெற்ற பெருமைக்குரியவர்களை மணமேட்க்கு அழைத்து, மணமக்களை அவர்கள் பெற்றோருக்கு மாலை அணிவிக்கச் செய்தல்.

மகவைத் தந்தவர் தந்தை ,ஆகி இருந்தவர் ஆய் ஆகிய தாய். அவர்கள் இருவரும் எத்தனை எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும் பெற்றோர் ஆவதில்லை.மக்களைப் பெற்றதாலேயே பெற்றோர் எனப்பட்டனர்.

பெறுமவற்றுள் யாமறி வதில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

தம் பொருள் என்ப தம் மக்கள் என்றார். பெற்றோர்கள் கொடையே உயிர்க்கொடை, உடற்கொடை, உணர்வுக் கொடை,உயர்வுக்கொடை எல்லாமும் ஆதலால், கண்கண்ட தெய்வமாகிய பெற்றோர்களை மணமக்கள், வணங்குகின்றார்கள் என்று கூறி மணமக்களை

பெற்றவர் வாழ்க ! பெருந்தகை வாழ்க !

என மும்முறை வாழ்த்தச் செய்து வணங்க வைத்தல், பெற்றோர் தம் மக்களுக்கு மலர் தூவி

உயிரே வாழ்க ! உயர்வே வாழ்க !

என மும்ம்முறை வாழ்த்தச் செய்தல்.

திருமண மங்கலநாண் (அ) விரலாழி பூட்டல்

பழைய சாளில் நம் முன்னோர் முழுமதி பார்த்து இரவுப்பொழுதில் மங்கல விழா நிகழ்த்தினர்.முழுமதிப்பொழுதே முழுத்தம் எனப்பட்டது.முழுத்தம் பார்த்தல், முழுத்தப்புடவை, முழுத்தக்கால் நடல் என்பவை பழைய வழக்கம்.
முழுத்தம் என்பது முகூர்த்தம் என ஆக்கப்பட்டது. பகல் மணமாகவும் மாறியது.

ஆயினும் வளர்பிறையில் திருமணம் செய்தல் அதன் அடையாளமாம்.முன்னாளில் மங்கல விழாவைத் தாய்மார்கள் முன்னின்று நடத்தினர். பொதுவிழாக்களும், சடங்குகளும் நடத்துவதில் தேர்ச்சியும் செய்நேர்த்தியும் உடைய முதுசெம்பெண்டிர் நால்வர் கூடி நடத்தியதையும், கற்பினில் வழுவாமல், நல்ல பல உதவிகளும் புரிந்து, கணவன் பாராட்டும் வகையில் வாழ்க என அவர்கள் வாழ்த்தியதையும் அகநானுறூ கூறுகின்றது.

அந்நிலை ,குலப்பெரியவர், ஊராளியர் தலைவர், நாட்டாண்மை, மூப்பர் என்பவர் முன்னிலையில் மணங்கள் நிகழ்ந்தன.

பின்னே சடங்குகளும் மாறி, மொழியும் மாறி ஆடவர் நடத்துவதாகவும் அமைந்துவிட்டது. பகுத்தறிவு , சீர்திருத்தம் எனப்படும் மணங்களும் ஆடவர் நடத்துவனவாகவே ஆகிவிட்டன. மணம் முதலிய, சடங்குகளை மகளிர் நடத்துகின்ற மரபை மீட்டெடுப்பின் நன்மையாம் எனக்கூறி, முதிய தாய்மார் நால்வரையோ பலரையோ மணமங்கல நாணை வழிபட்டு எடுத்து மணமகன் கையில் வழங்கித்திருப்பூட்டு நடத்துமாறு செய்தல், கெட்டிமேளம் முழங்கச் செய்தல், தாய்மார்களைக் குரவை இடச் செய்தல் பெருநலமாம், திருப்பூட்டு நிகழ்த்தியப் பின்னர்,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

என மும்முறை கூறி, மேடையில் இருப்பவர்களையும் அவையோரையும் கூறச் செய்தல், மேடையில் இருப்போர் மலரும் ,மங்கல அரிசியும் தூவுதல்.


-------------தொடரும்

மேலும வாசிங்க...

தமிழ் நெறித் திருமணம்...

>> 05 February 2010

தமிழரின் திருமண முறை முன்பு எளிமையாக மூத்தோர் முன்னிலையில் நடைபெற்றது.இன்றைக்குக் காணக்கூடிய அக்கினி வளர்த்து,ஐயர் வைத்து நடத்தும் முறை அன்று இல்லை.சிலப்பதிகார காலத்தில் வந்தது என்றாலும் அது ஆரிய கலப்பினால் என்றே கூறலாம்.

தமிழன் ஏற்படுத்திக் கொண்ட திருமணமுறைபடி திருமணம் நடக்கவேண்டும் என்னும் விருப்பம் கொண்டு பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் அல்லூர் தவச்சாலை நிறுவனர் புலவர் இரா.இளங்குமரனார்.
இவர் தமிழ் நெறியில் திருமணங்களை எவ்வாறு நடத்துவது எனச் சிலருக்குப் பயிற்சியும் கொடுத்து வருகின்றார்.
திருமணம் தமிழ் மரபு படி எவ்வாறு நிகழ்த்தவேண்டுமெனப் பொதுக்குறிப்பினைத் தருகின்றார்

நம் பழைய மரபு - நம் பண்பாடு - பகுத்தறிவு இன நலம் என்பவற்றைப் பாதுகாத்துப் போற்றும் வகையில் அமைக்கப்படுவது இத் தமிழ்நெறி திருமணம்


எளிமை,இனிமை, நிறைவு என்பவை சார்ந்தவையாக இத் திருமணமுறையும்,பிற சடங்குகளும.

முற்றிலும் தமிழையும், தமிழ் நெறியாம் திருக்குறளையும் கொண்டு நிகழ்த்தப் பெறுவன.

இவை பாராட்டுதல், வாழ்த்துதல் என்பனவே உடையவை நல்லவை அன்றி அல்லவை இடம் பெறாதவை.

மகளிர், பெற்றோர், சான்றோர் ஆகியோரை முதன்மைப்படுத்தி நிகழ்த்தப் பெறுவன.

திருமணம் நிகழ்முறை

மணமக்கள் இருவரையும் மணவுடை, மணமாலை ஆயவற்றுடன் ஒரே நேரத்தில் அழைத்து மண இருக்கையில் மணமகனுக்கு வலப்பக்கம் மணமகளும், இடப்பக்கம் மணமகனும் அமரச் செய்தல்.

மங்கல விழாத் தலைவர், முன்னிலையர், மங்கலவிழா நிகழ்த்துநர் ஆகியோரை முன்மொழிந்து அமரச் செய்தலும், வழி மொழிதலும்.

தலைவர் விழாத் தலைமை ஏற்று மணமக்கள் வீட்டார் சார்பாக வரவேற்றுக் கூறலும் வரவேற்கக் கூறலும் அறிமு உரையும் சிறப்புச் செய்தலும்.

மணவிழாவை இவர் நிகழ்த்துவார் எனத் தலைவர் கூறுதல்.


மணவியா நிகழ்த்துதல்

மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்குமாறு செய்து மீண்டும் இருக்கையில் அமரச் செய்தல்.

இயற்கை இறைவழிபாடு (அ) மொழி வாழ்த்து (அ) திருக்குறள் போற்றி என்பவற்றுள் ஒன்றையோ இரண்டையோ மூன்றையோ சூழ்நிலை காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூறுதல்.

இயற்கை இறைவழிபாடு

செங்கட் கரும்பாய் இனிப்பானைச்
செழுந்தேன் மலராய் மணப்பானைத்
திங்கட் பிறையாய்த் திகழ்வானைத்
தெளிந்த இசையாய் அமைவானை
அங்கட் புவனம் அளிப்பானை
அறமோ டின்பம் அருள்வானை
நங்கட் புலத்துள் நிறைவானை
நறவார் மலர்த்தூய்ப் பணிவாமே


மொழி வாழ்த்து

நீல வானின் உயரத்தை
செஞ்சம் கவரும் நிலப்பரப்பைக்
கோலக்கடலின் ஆழத்தைக்
குன்றத் தமைந்த பேருரத்தைச்
சாலத் துளிக்கும் பனிநீரைச்
சாந்தில் தொடுத்த தீந்தேனை
மூலச் சொல்லாய் முகிழ்ந்தோங்கும்
முன்னைத் தமிழே வாழியவே.

திருக்குறள் போற்றி ! மந்திர மொழிகள் !

அகரமுதலாம் ஆதியே போற்றி !
மலர்மிசை ஏகும் மாண்டி போற்றி !
தனக்குவமை இல்லாத தகையடி போற்றி !
எண்குணத் திலங்கும் இறையே போற்றி
அமிழ்த மழையாம் அருளே போற்றி!
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி !
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி !
குணமென்னும் குன்றே குறியே போற்றி !
மனத்தில் மாசிலா மணியே போற்றி !
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி !
மங்கல மனையற மாட்சியே போற்றி !
அறிவறி பண்புப் பேறே போற்றி !
அன்போ டியைந்த வழக்கே போற்றி !
அகர முதலாம் ஆதியே போற்றி ! போற்றி !

மணவிழாத் தொடங்கவுரை

திருமணக் கரணத்திற்கு வந்துள்ள பெருமக்கள், பெற்றோர், உற்றார், உறவினர், உறவு, அன்று, நண்பு ஆகிய அனைவரையும் வணங்கி அவர்கள் இனிய இசைவுடன் மங்கல விழா நிகழ்த்துவதாகக் கூறுதல்.

தாய் மண் வழிபாடு (அ) உலக நலவழிபாடு

ஒவ்வொரு நலமும் உலக நலத்தில் உள்ளது. உலக நலம் ஒவ்வொருவர் நலத்திலும் உள்ளது. நாம் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, உறையும் வீடு, உளதாகிய வாழ்வு ஆகிய எல்லாவற்றிலும் உலகவர் பங்களிப்பு இல்லாமல் இல்லை. மசமக்கள் அணிந்துள்ள மாலைக்குள் எத்தனை பேர் உழைப்பு உள்ளது? பூ, பதியன் போட்டவன், நட்டவர், நீர் வட்டவர், களை எடுத்தவர், காத்தவர், பூப்பறித்தவர், மாலை கட்டியவர், வாங்கி வந்தவர் என எத்தனையோ பேர்களின் உள்ளார்ந்த உணர்வில் உழைப்புத்தானே மணமங்கல மாலையாகித் திகழ்கின்றது.இதனால் உலகம் நமக்குள்ளும், உலகுக்குள் நாமும் இருத்தல் புலப்படும்.ஆதலால் ,உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய்நாட்டு மண் வழிபாட்டை மணமக்கள் செய்கின்றார்கள்.என்று கூறித் தட்டில் வைக்கப்பட்டுள்ள மண்ணின் மேல் உதிப்பூக்களை மும்முறை தூவச்செய்தல் வேண்டும்.

உலகம் வாழ்க ! உயர்வெல்லாம் வாழ்க !

என மும்முறை மணமக்களைச் சொல்ல வைத்தல்.
-----------தொரும்

மேலும வாசிங்க...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணையப் பயிலரங்கம்...

>> 30 January 2010






அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று இணையப் பயிரங்கம் நடைபெறுகின்றது.துறைத்தலைவர் மொழிப்புல முதன்மையர்பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்பு நல்க,கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரைவழங்க,பேராசிரியர் ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்ற ,முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்ற பயிலரங்கம் இனிதே தொடங்கியது.
காலை அமர்வில் முனைவர் இளங்கோவன் இணையம் தொடர்பான செய்திகளையும்,தமிழ் எழுத்துருவை கணினியில் எவ்வாறு பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பதைப் பற்றியும் அதனோடு மின்னஞ்சல் உருவாக்கும் முறையினையும் விளக்கினார்.

மாலை அமர்வில் தமிழ் நிலவன்,செல்வமுரளி,ஒரிசாபாலு ஆகியோர் உரையாற்றவுள்ளனர்

மேலும வாசிங்க...

நட்பு................

>> 24 January 2010

நட்பு என்பதற்கு அன்பு,ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாரதியும், நட்பு,தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும்.வயது,மொழி,இனம்,நாடு என எந்த எல்லைகளும் இன்றி,புரிந்து கொள்ளுதலையும்,அனுசரித்தலையிம் அடிப்படையாகக் கொண்டது நட்பு.நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துத் தங்களின் தனிப்பட்டு விருப்பு வெறுப்புக்களை மறந்து கொள்ளவார்கள்.நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து,இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள் என விக்கீப்பீடியாவும் பொருள் கூறுகின்றன.
க்ரியா உறவினர் அல்லாத ஏற்படும் உறவு நட்பு எனக் கூறுகின்றது. விக்கிபீடியாவோ பொதுவாக இருவரிடம் தோன்றும் உறவு என்று கூறுகின்றது.
நட்பினை ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு ,பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பு என்று வகைப்படுத்துகின்றனர்.சங்க இலக்கியத்தில் பார்க்கும் போது ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்னும் அடி ஆண்பெண் நட்பைக் கூறுவதைக் காணலாம்.இங்கு காதலை நட்பாக கூறப்பட்டுள்ளதையும் அறியலாம்.
நட்பின் பெருமையை உணர்ந்த திருவள்ளுவரும் நட்பு ,நட்பாராய்தல்,பழமை,தீ நட்பு,கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் நட்பினைப் பற்றி பேசுகின்றார். ஆய்து ஆய்து தெளிந்து நட்பு கொண்ட பிறகு, அந் நட்பினை எவ்வாறு பேணவேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகின்றார்.
நட்பு என்ற சொல்லுக்கு வேர் சொல் ‘நள்’ என்பதாகும்.’நள்’ என்றால் செறிந்த என்பது பொருளாகும். கருமையால் செறிந்த இரவினை நள்ளிரவு என்று கூறுவதைப் போல அன்பினால்,கருத்தினால் செறிந்தவர்களை நண்பர்கள் என்று கூறலாம்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரம்பற்ற வீணைக்குச் சமம்,நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சி இல்லாத மரணத்துக்குச் சமம். (ஊருக்கு நல்லது சொல்வேன் ,தமிழருவி மணியன்)நரம்பில்லாத வீணை இனிய இசையை கேட்கமுடியாது,அது போலவே நண்பர்கள் இல்லாத வாழ்வு அவ்வளவு இனிமையுடையதாக இருப்பதில்லை.
நல்ல நட்பு ஒருமனிதனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே உண்டு பண்ணும்,தீய நட்பு அவன் வாழ்க்கையே அழித்துவிடும்.கண்டவுடன் தோன்றும் நட்பும்,காதலும் நீடிப்பது இல்லை.நட்பை ஆய்ந்து ஆய்து கொள்ளவேண்டும் என்பர் வள்ளுவர்.
நிலத்தினும் பெரிதாய் ,வானினும் உயர்ந்த்தாய்,கடலினும் ஆழமாதாய்,தாமரைத் தண்தாதூதி மீமிசைத் சாந்தின் தொடுத்த தீந்தேனாய் நட்பு இருந்தாலும் அங்கு சுயநலம் என்பது தலைகாட்டாமல் அன்பில் கனிந்த நட்பாக இருக்க வேண்டும்.ஒருவருக்காக ஒருவரை இழக்க துணியவேண்டும்,புரிதல் வேண்டும் ஒன்றாய் உண்டு ,களித்து,ஊர் சுற்றுவதல்ல நட்பு.அகத்து ஒன்றாய் பிறருடைய கருத்தை மதிக்க கூடியவராய் இருக்கவேண்டும் . நண்பனுக்குத் துன்பம் நேர்கையில் ,அவனை விட்டு நீங்காது அத்துன்பத்தைப் போக்கி,அவனைத் தேற்றி நல்லவழியில் செலுத்தி,தன்னால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும்,
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்
அல்லல் உழப்பதாம் நட்பு (787)

நட்டாருக்கு அழிவுவந்தவிடத்து,அவர் துன்பத்தை நீக்கி,நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கி,தன்னால் செயலற்றவிடத்து அவரோடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு எனுற விளக்கம் தருவர் மணக்குடவர்.
நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்படவேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.சாக்கரட்டீஸ்.
வள்ளுவரும் நட்பை ஆய்ந்தாய்ந்து கொள்ளவேண்டும் என்கின்றார். அப்படி கொள்ளத நட்பு சாகும் காலம் வரை துன்பத்தைத் தரக்கூடியதாகவே இருக்கும். ஆகையின் நண்பராக தேர்ந்துகொள்ளுவதற்கும் பல முறை சிந்தித்து நட்பு கொள்ளவேண்டும்.

மேலும வாசிங்க...

பிள்ளையார் சுழி........

>> 17 January 2010

நாம் எழுதத் தொடங்குவதற்கு முன் 'உ' என்னும் எழுத்தை எழுதுவதை வழக்கமாக்க கொண்டுள்ளோம்.இதனை பிள்ளையார் சுழி என்றும்,அது பிள்ளையார் வழிபாட்டின் முதல் சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணகதைகளும் கூறப்பெற்றுள்ளன.

பொதுவாக பழங்காலத்தில் தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர்.
பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிய ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்பதுண்டு.இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர்.இந்த தீண்டற்குறியைத்தான் பின்னாட்களில் பிள்ளையார் சுழி என்று கூறும் மரபாக வந்தது.

இவ்வாறு பிள்ளையார் வழிபாடு தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே ஏடுதீண்டும் வழக்கம் இருந்துள்ளது என்தென்பது ஆறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மையாகும்.மேலும்,புள்ளியில்லாச் சுழி என்பது வெறும் சுழியத்தைக் குறிக்கும்.ஓலைச்சுவடியில் எழுதும் போது புள்ளி வைப்பதில்லை.புள்ளி வைத்தால் ஏடு பொத்து கிழிந்துவிடும்.ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாக சுழியம் போடுவர்.புள்ளியில்லாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழியென மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின் கருத்து.

மேலும வாசிங்க...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணையப் பயிலரங்கம்...

>> 16 January 2010



அழைப்பிதழ்

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.

பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

மேலும வாசிங்க...

அறக்கட்டளைச் சொற்பொழிவு

>> 06 January 2010


ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் பெயிரில் உள்ள அறக்கட்டளைச் சார்பில் இன்று சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் மா.அறிவு நம்பி அவர்கள் நாட்டாரின் கட்டுரைத் திறன் என்னும் தலைப்பிலும் பதினெண் கீழ்கணக்கும் நாட்டாரும் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.

முதல் அமர்விற்கு துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் தலைமையேற்றார்.

நாட்டாரின் இயற்பெயர் சிவப்பிரகாசம் என்னபதாகும்.இவருக்கு முன் பிறந்த இருவர் மரணம் எய்த,இக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டி திருவேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரை மாற்றி வேங்கடப் பெருமானின் நினைவாக வேங்கடசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.என்று துவங்கினார்.

நாட்டாரின் கட்டுரையினை ஆய்து,கட்டுரை என்பதற்கு நாட்டார் கூறும் விளக்கம், சொற்களைப் பெய்துஉரைக்கும் திறன்,சொல்லவந்த கருத்தினை வலியுறுத்த அடுக்கி கூறும் உத்தி,அவர் எடுத்தாண்ட நூல்களை வகைபாடு செய்யும் முறை,எந்த நூலைப்பற்றி குறிப்பிட்டாலும் அந்நூலினை அடைகொடுத்து சிறப்பித்துக் கூறும் தன்மை,வினா விடையாக எழுதிச்செல்லும் பாங்கு,இசையில் அவருக்கிருந்த நுட்பமாக அறிவு போன்றவற்றை எடுத்துரைத்தார்.
இரண்டாம் அமர்விற்கு பேராசிரியர் மு.வள்ளியம்மை தலைமையேற்றார்.

பதினெண் கீழ்க்கணக்கும் நாட்டாரும் என்னும் தலைப்பில் நாட்டார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு எழுதிய உரைக்ள,அவற்றுள் சிறப்பான பகுதிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டினார்.

மேலும வாசிங்க...